Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சமச்சீர் பாட புத்தகங்களை விரைந்து வழங்க நடவடிக்கை : அரசுக்கு பா.ஜ.,சாமிநாதன் கோரிக்கை

சமச்சீர் பாட புத்தகங்களை விரைந்து வழங்க நடவடிக்கை : அரசுக்கு பா.ஜ.,சாமிநாதன் கோரிக்கை

சமச்சீர் பாட புத்தகங்களை விரைந்து வழங்க நடவடிக்கை : அரசுக்கு பா.ஜ.,சாமிநாதன் கோரிக்கை

சமச்சீர் பாட புத்தகங்களை விரைந்து வழங்க நடவடிக்கை : அரசுக்கு பா.ஜ.,சாமிநாதன் கோரிக்கை

ADDED : ஜூலை 25, 2011 12:12 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரி அரசு, தமிழகத்தில் இருந்து சமச்சீர் புத்தகங்களை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பா.ஜ., செயலாளர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும் என கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. எனவே புதுச்சேரி அரசு தமிழகத்தில் இருந்து பாட புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு வினியோகிக்க வேண் டும். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை போக்க உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம், பல மாநிலங்களில் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 2 மாதங்களாக தனியார் பள்ளிகளில் பொது அறிவுப்பாடங்கள் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் கூட வழங்கவில்லை. சமச்சீர் கல்வி விஷயத்தில் முதல்வர் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது குழப்பத்தை உண்டாக்குகிறது.



சமச்சீர் கல்வித் திட்டத்தினை பயன்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது காலாண்டு தேர்வு நெருங்கி வருவதால்,தேர்விற்கு பிறகு சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவச பால் சரி வர வழங்கவில்லை. பல பள்ளிகளில் பால் காய்ச்சும் அடுப்பு பழுதாகியுள்ளதால், பால் கடத்தப்படுகிறது. மாணவர்கள் மதிய வேளையில் அளிக்கும் பாலை புறக்கணிப்பதால், அதற்கு பதில் மாற்று திட்டத்தை பயன்படுத்த வேண்டும். பழுதான அடுப்புகளுக்கு பதிலாக, புதிய அடுப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us