/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஏழ்மையால் தகர்ந்திடுமோ "ஏரோநாட்டிகல்' கனவு : கவலையில் மாணவிஏழ்மையால் தகர்ந்திடுமோ "ஏரோநாட்டிகல்' கனவு : கவலையில் மாணவி
ஏழ்மையால் தகர்ந்திடுமோ "ஏரோநாட்டிகல்' கனவு : கவலையில் மாணவி
ஏழ்மையால் தகர்ந்திடுமோ "ஏரோநாட்டிகல்' கனவு : கவலையில் மாணவி
ஏழ்மையால் தகர்ந்திடுமோ "ஏரோநாட்டிகல்' கனவு : கவலையில் மாணவி
ADDED : செப் 03, 2011 11:00 PM
சென்னை : இன்ஜினியரிங் படிக்க கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்லூரி கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாததால், ஏழைப் பெண்ணின் உயர்கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை, பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்தவர்கள் சேகர், 54, தேவி, 45. இவர்களின் இரண்டாவது மகள் புவனேஸ்வரி, 17. சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற புவனேஸ்வரி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1059 மதிப்பெண் எடுத்துள்ளார். பி.இ., படிப்பிற்கான இவரது, 'கட்-ஆப்' மதிப்பெண் 175. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில், பி.இ., (ஏரோநாட்டிக்கல்) படிக்க இவருக்கு இடம் கிடைத்துள்ளது. கல்விக் கட்டணம் 32 ஆயிரத்து 500 ரூபாயுடன், பஸ் மற்றும் உணவுக் கட்டணம் ஆகியவற்றை சேர்த்து, ஆண்டிற்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் கல்லூரிக்கு செலுத்த வேண்டும். இதில், முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி என்ற முறையில், தமிழக அரசிடமிருந்து ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் புவனேஸ்வரிக்கு கிடைக்கும். மீதித் தொகையை செலுத்த முடியாமல், புவனேஸ்வரியின் பெற்றோர் திணறி வருகின்றனர். இதனால், பி.இ., படிக்க இடம் கிடைத்தும், கல்லூரி படிப்பை தொடர முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இவரது படிப்பிற்கு உதவி செய்ய விரும்புவோர் 96771 98241 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து புவனேஸ்வரி கூறும்போது, ''ஓட்டலில், நாள் சம்பளத்திற்கு அப்பா வேலை செய்து கொண்டிருந்தார். காச நோய் வந்ததிலிருந்து, அவரால் அந்த வேலைக்கும் போக முடியவில்லை. வீட்டு வேலை செய்து அம்மா தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எங்கள் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு, என் படிப்பிற்கு யாராவது நிதியுதவி செய்தால் உதவியாக இருக்கும்,'' என்றார்.


