Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உள்ளாட்சியில் அதிக இடங்கள் கைப்பற்ற அ.தி.மு.க., முடிவு

உள்ளாட்சியில் அதிக இடங்கள் கைப்பற்ற அ.தி.மு.க., முடிவு

உள்ளாட்சியில் அதிக இடங்கள் கைப்பற்ற அ.தி.மு.க., முடிவு

உள்ளாட்சியில் அதிக இடங்கள் கைப்பற்ற அ.தி.மு.க., முடிவு

ADDED : ஜூலை 23, 2011 10:25 PM


Google News

சிவகாசி : மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் மருது தலைமையில் சிவகாசியில்நடந்தது துணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் அசன் பதுரூதீன் வரவேற்றார். அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி, கோபால்சாமி எம்.எல்.ஏ., மகளிர் அணி இணைச்செயலாளர் தி கோதண்டம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகங்காதரன், பாலகிருஷ்ணன், இன்பத்தமிழன், தொகுதி இணைச் செயலாளர் மாரியப்பன், திருத்தங்கல் நகர செயலாளர் சரவணக்குமார் உள்பட பலர் பங்ககேற்றனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்வது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிதி உதவி: திருத்தங்கலில் அன்னை தெரசா மகளிர் சுயஉதவி குழு, ஜெ.ஜெ., மகளிர் சுய உதவி குழுவினர் தங்களுக்கு தொழில் நடத்த உதவி கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனுக்கொடுத்தனர். இம் மனு பரிசிலீக்கப்பட்டு இரு குழுக்களுக்கு 1.45 லட்சம் ரூபாய் அ.தி.மு.க., சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இதை அமைச்சர், மாவட்ட செயலாளர் வழங்கினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us