ADDED : ஜூலை 26, 2011 10:17 PM
சிதம்பரம் : பொன்னந்திட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
சிதம்பரம் அடுத்த பொன்னந்திட்டு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்குவது, இலவச குறிப்பேடுகள் மற்றும் இந்திய அரசின் இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அசோக் வரவேற்றார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பஸ் பாஸ், விருதுகள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கினார். ஆசிரியர்கள் கீதா, டெல்பின் சாந்தி, ரமேஷ், மதிவாணன், குப்புசாமி பங்கேற்றனர். சிவக்குமார் நன்றி கூறினார்.