Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாசு கட்டுப்பாடு வாரியம் மீது வழக்கு தொடர "டீமா' முடிவு

மாசு கட்டுப்பாடு வாரியம் மீது வழக்கு தொடர "டீமா' முடிவு

மாசு கட்டுப்பாடு வாரியம் மீது வழக்கு தொடர "டீமா' முடிவு

மாசு கட்டுப்பாடு வாரியம் மீது வழக்கு தொடர "டீமா' முடிவு

ADDED : ஜூலை 15, 2011 12:59 AM


Google News

திருப்பூர் : சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்துவது தொடர்பான ஐகோர்ட் உத்தரவு குறித்து, எவ்வித மேல் நடவடிக்கை எடுக்கப்படாததால், மத்திய, மாநில அரசு மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியம் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர, 'டீமா' தீர்மானித்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) செயற்குழு கூட்டம் சங்க வளாகத்தில் நடந்தது. தலைவர் முத்துரத்தினம் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். இன்றைய பின்னலாடை தொழில் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திருப்பூர் சாய, சலவை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என 'டீமா' சங்கத்தால், கடந்த பிப்., 7ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கில், 'டீமா' சங்க கோரிக்கையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் நிறைவேற்ற அவகாசம் அளித்து, மத்திய, மாநில அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. ஐகோர்ட் உத்தரவு பெறப்பட்டதில் இருந்து ஜூலை 11 வரை, இதுதொடர்பாக அனைத்து மத்திய, மாநில அரசு துறையினருக்கும் நினைவூட்டுதல் கடிதம், கோர்ட் உத்தரவு நகல் மற்றும் முறையான ஆவணங்கள் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது. இன்றைய தேதி வரை நீதிமன்ற உத்தரவுக்கு எவ்வித பதிலோ, மேல் நடவடிக்கையோ இல்லாத காரணத்தால், மேற்பட்ட துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடர்வது தொடர்பான நோட்டீஸ், மத்திய, மாநில அரசு மற்றும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என 'டீமா' சங்கம் தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us