ADDED : செப் 16, 2011 12:28 AM
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அடுத்த காட்டுநெமிலி கிராமத்தில் உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.காட்டுநெமிலி அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் கீதா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் சக்திவேல், ஊராட்சி தலைவர் வளர்மதி, கற்கும் பாரத திட்ட பணியாளர்கள் சாந்தி, முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


