Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/"உதவிகளின்' அவசரக் கோலம் தேர்தல் அலுவலர்களுக்கு சிக்கல்

"உதவிகளின்' அவசரக் கோலம் தேர்தல் அலுவலர்களுக்கு சிக்கல்

"உதவிகளின்' அவசரக் கோலம் தேர்தல் அலுவலர்களுக்கு சிக்கல்

"உதவிகளின்' அவசரக் கோலம் தேர்தல் அலுவலர்களுக்கு சிக்கல்

ADDED : அக் 07, 2011 12:01 AM


Google News
பழநி : உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அவசரக் கோல பணியால், தேர்தல் அலுவலர்கள் சிக்கலில் சிக்கினர்.

உள்ளாட்சி தேர்தலில், வேட்பு மனு பெறுதல், பரிசீலனை, சின்னம் வழங்குதல் போன்றவை உதவி தேர்தல் அலுவலர்களின் பணி. அக்., 3 ல், சின்னம் ஒதுக்கீடு முடிந்தது. இறுதிப் பட்டியல், அகர வரிசைப்படி தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான அலுவலர்கள் அவசரக் கோலத்தில் பட்டியல் தயாரித்தனர். வேட்பாளர்களுக்கான இன்ஷியல், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் குளறுபடி இருந்தது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவ ட்ட தேர்தல் பிரிவிற்கு, விபரங்களை அனுப்ப முடியவில்லை. நள்ளிரவில், மனுக்களை ஆய்வு செய்து, அகர வரிசையில் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us