Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பைக்கில் இருந்துதவறி விழுந்த பெண் பஸ் மோதியதில் பலி

பைக்கில் இருந்துதவறி விழுந்த பெண் பஸ் மோதியதில் பலி

பைக்கில் இருந்துதவறி விழுந்த பெண் பஸ் மோதியதில் பலி

பைக்கில் இருந்துதவறி விழுந்த பெண் பஸ் மோதியதில் பலி

ADDED : ஆக 03, 2011 01:33 AM


Google News
தர்மபுரி: மாரண்டஹள்ளி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பஸ் மோதியதில், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.மாரண்டஹள்ளியை அடுத்த கோட்டூர்மலையை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்.

இவரது மனைவி பானுமதி (35). இவர்களது உறவினர் திருப்பதி. இவரும் பானுமதியும் நேற்று முன்தினம் சீங்காட்டில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பைக்கில் சென்றனர்.பின்னர் மீண்டும் கோட்டூர் மலை நோக்கி பைக்கில் வந்த போது, கரிகுட்டனூர் அருகே வந்த போது, முன்னாள் சென்ற அரசு பஸ்ஸுக்கு வழி விடுவதற்காக திருப்பதி பைக்கை சாலையோரம் நிறுத்த முயன்ற போது, பைக்கில் இருந்து பானுமதி கீழே சரிந்து விழுந்ததில், பஸ் சக்கரம் பானுமதி மீது ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பானுமதி இறந்தார். திருப்பதி காயம் அடைந்து சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாலக்கோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us