Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திருந்திய ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

திருந்திய ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

திருந்திய ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

திருந்திய ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

ADDED : செப் 03, 2011 11:55 PM


Google News

திருநெல்வேலி : திருந்திய ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விசுவாசம் தலைமை வகித்தார். தேசிய அரசு அலுவலர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சீத்தாராமன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நெல்லையப்பன் உட்பட பலர் பேசினர். அரசு வழங்கியுள்ள சலுகைகளை கருவூலத்தில் இருந்து பெறுவதற்கு கஷ்டப்படும் சூழ்நிலையை மாற்ற வேண்டும். ஓய்வு பெற்ற தேர்வு நிலை வேளாண் துணை அலுவலர்களுக்கு திருந்திய ஓய்வூதியமான 10 ஆயிரத்து 650 ரூபாயை வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். நெல்லை ஜங்ஷன் ரயில்வே முன்பதிவு மையத்தில் மூத்த குடிமக்களுக்கு தனி கவுண்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். பாளை அரசு ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் ஓய்வூதிய அலுவலர்களுக்குரிய மருந்தகத்திற்கென ஒப்பளிப்பு வழங்கப்பட்ட பணியாளரை நியமித்து ஓய்வூதியர்களை அலையவிடாமல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகர்வால் கண் ஆஸ்பத்திரி குழுவினரால் ஓய்வூதிய அலுவலர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் நல்லபெருமாள் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us