Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கூரை இடிந்து விழுந்த கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்

கூரை இடிந்து விழுந்த கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்

கூரை இடிந்து விழுந்த கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்

கூரை இடிந்து விழுந்த கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்

ADDED : ஜூலை 25, 2011 11:34 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் பெரிய காலனியில் கூரை இடிந்து விழுந்துள்ள கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது.விழுப்புரம் பழைய ஸ்டேட் பாங்க் அருகே உள்ள இடத்தில் பெரிய காலனி மற்றும் அருந்ததியர் காலனி பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அங்கன் வாடி மையம் இயங்கி வருகிறது.

இதில் பெரிய காலனியைச் சேர்ந்த 25 குழந்தைகளும், அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 25 குழந்தைகளும் படிக்கின்றனர். செங்கல் சுவர் அமைக்கப்பட்டு மேற்புறம் 'ஆஸ்பெஸ்டாஸ் சீட்' கூரையிலான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.இதன் மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டாண்டுகளாகியும் இதே கட்டடத்தில் அங்கன்வாடி மையம் தொடர்ந்து செயல் பட்டு வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இம்மையத்திற்கு வந்து செல்கின்றனர். பக்கவாட்டு சுவர்கள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு, கூரைகள் இடிந்துள்ள இந்த கட்டடத்தில் குழந்தைகள் அச்சத்துடன் தினமும் வந்து செல்கின்றனர். தற்காலிகமாக மாற்று இடம் ஏற்பாடு செய்வதுடன், அதே கட்டடத்தை புதுப்பிக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us