/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆக்கிரமிப்பு நிற்க இடமின்றி பயணிகள் தவிப்புநாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆக்கிரமிப்பு நிற்க இடமின்றி பயணிகள் தவிப்பு
நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆக்கிரமிப்பு நிற்க இடமின்றி பயணிகள் தவிப்பு
நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆக்கிரமிப்பு நிற்க இடமின்றி பயணிகள் தவிப்பு
நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆக்கிரமிப்பு நிற்க இடமின்றி பயணிகள் தவிப்பு
ADDED : செப் 08, 2011 02:45 AM
நாமக்கல்:ஆக்கிரமிப்பு கடைகளால், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதிபோல்
காட்சியளிக்கிறது. அதனால், பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகள் நிற்க இடமின்றி
தவிப்பதுடன், போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயமும் நிலவி
வருகிறது.நாமக்கல் மப்சல் பஸ் ஸ்டாண்ட், டவுன் பஸ் ஸ்டாண்ட், மினி பஸ்
ஸ்டாண்ட் என அனைத்தும் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு,
720 பஸ்கள், நாமக்கல் பஸ் ஸ்டாண்டினுள் நுழைந்து வெளியேறி வருகிறது.
அனைத்து பஸ்களும் உள்ளே நுழைந்து வெளியேறுவதற்கு ஒரே வழியை பயன்படுத்தி
வருகிறது.அதனால், பஸ் ஸ்டாண்டின் நுழைவுப் பகுதியில் நாள் முழுவதும்
நெரிசல் மிகுந்து காணப்படும். தவிர, பஸ் ஸ்டாண்ட் உள்புறம்,
வெளிப்புறத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வணிக வளாகக் கடைகள்
செயல்பட்டு வருகின்றன.இது தவிர, பஸ் ஸ்டாண்ட் நடைபாதை, டவுன் பஸ் ஸ்டாண்ட்
நிழற்கூடம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டவுன் பஸ் ஸ்டாண்ட் நிழற்கூடம் முழவதும் ஆக்கிரமித்து
தள்ளுவண்டி, பழக்கடை அமைக்கப்பட்டுள்ளது.அதனால், நிழற்கூடத்தில் பயணிகள்
நிற்க முடியாத சூழல் உள்ளது.
தவிர, அக்கடைகளில் பொருள் வாங்க குவியும்
மக்களால், பஸ் போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயமும் நிலவி வருகிறது.
தள்ளுவண்டிக் கடைகளால், நகராட்சிக்கு வாடகை செலுத்தி கடை நடத்துவோருக்கு
வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.மேலும்,
ஆக்கிரமிப்புக் கடைகளால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து நகர மக்கள் சிலர்
கூறியதாவது:நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடை நடத்துவோர், நகராட்சி
நிர்வாகத்துக்கு குறிப்பிட்ட தொகையை வாடகையாக செலுத்தி வருகின்றனர்.
அதன்மூலம் நகராட்சி வருவாய் ஈட்டி வருகிறது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை
ஆக்கிரமித்து கடை விரித்துள்ளோர், நகராட்சிக்கு வாடகை எதுவும் செலுத்த
தேவையில்லை.அந்த வகையில், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது
ஒருபுறம் இருந்தாலும், மிகக் குறுகிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை ஆக்கிரமிப்பு
செய்து கடை வைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை
நகராட்சியினர், போலீஸாரும் கண்டு கொள்வதில்லை. இட நெருக்கடியுடன்
செயல்படும் பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யக்கோரி அனைத்து தரப்பினரும்
தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் கோரிக்கையை
நிறைவேற்ற காலதாமதம் பிடிக்கும். எனவே, பஸ் ஸ்டாண்ட் வளாக ஆக்கிரமிப்புகளை
அகற்றி, நகராட்சி நிர்வாகத்தினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால், இட
நெருக்கடியை தவிர்க்க முடியும். இது, பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகளுக்கும்
வசதியாக அமையும்.இவ்வாறு கூறினர்.


