/உள்ளூர் செய்திகள்/மதுரை/வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து 46 பேர் மனு :ஐகோர்ட் தள்ளுபடிவேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து 46 பேர் மனு :ஐகோர்ட் தள்ளுபடி
வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து 46 பேர் மனு :ஐகோர்ட் தள்ளுபடி
வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து 46 பேர் மனு :ஐகோர்ட் தள்ளுபடி
வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து 46 பேர் மனு :ஐகோர்ட் தள்ளுபடி
ADDED : அக் 13, 2011 01:39 AM
மதுரை : மதுரை உட்பட தென் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து தாக்கலான 46 மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பு, மனு தள்ளுபடி, அடுத்தவர் வேட்பு மனு ஏற்பை நிராகரிக்க கோரி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் ஐகோர்ட் கிளையில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ராமசுப்ரமணியம் நேற்று பிறப்பித்த உத்தரவு: தற்போது உள்ளாட்சி தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அரிதிலும் அரிதான வழக்கு இது. உடனடியாக மனுக்களை எடுத்து விசாரிக்க கோருவதை ஏற்க முடியாது. அத்தகைய சூழ்நிலை தற்போது இல்லை. கோர்ட் தலையிட வேண்டியதும் இல்லை. இப்போது நிவாரணம் அளித்தால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அமையும், என்றார்.


