/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரையில் ரூ.10, 20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடுமானாமதுரையில் ரூ.10, 20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு
மானாமதுரையில் ரூ.10, 20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு
மானாமதுரையில் ரூ.10, 20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு
மானாமதுரையில் ரூ.10, 20 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு
ADDED : ஜூலை 13, 2011 10:11 PM
மானாமதுரை : மானாமதுரையில் அரசின் சலுகைகள் பெறுவதற்காகவும், புது ரேஷன் கார்டு வாங்கவும், மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர்.
விண்ணப்பத்துடன் 10, 20 ரூபாய்க்கான உறுதிமொழி பத்திரம் தரவேண்டும். கல்வி உதவி தொகைக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இது தவிர புதிதாக மின் இணைப்பு பெற ஒப்பந்தம், வங்கி கடன், அரசு திட்டங்களுக்காக பத்திரங்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. ஆனால், இங்கு 10 மற்றும் 20 ரூபாய்க்கான பத்திரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


