ADDED : ஆக 06, 2011 10:05 PM
காரைக்குடி:இந்திய கம்யூ., நகர் குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது.
நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் குணசேகரன்,
மாநில குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர்
சீனிவாசன் வரவேற்றார். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் காரைக்குடி
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இளைஞர்
பெருமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜிகாந்தி, மாதர் சங்க நிர்வாகிகள் மஞ்சுளா,
திருக்கம்மாள் பங்கேற்றனர். நிர்வாகி மணவழகன் நன்றி கூறினார்.


