ADDED : அக் 08, 2011 10:50 PM
வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல், 34.
இவரது மகன்கள் நெடுஞ்சாலையில் உள்ள மடத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை தேடி சக்திவேல் தனது சைக்கிளில் அய்யர்மடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழி சென்ற இண்டிகா காரின் முன் சக்கர டயர் வெடித்தது. கட்டுப்பாடு இழந்த கார், சக்திவேல் மீது மோதி அதே இடத்தில் இறந்தார். போலீசார் விசாரிகின்றனர்.


