Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அனைத்து வார்டிலும் குடிநீர் தொட்டி

அனைத்து வார்டிலும் குடிநீர் தொட்டி

அனைத்து வார்டிலும் குடிநீர் தொட்டி

அனைத்து வார்டிலும் குடிநீர் தொட்டி

ADDED : அக் 11, 2011 11:17 PM


Google News

பரமக்குடி : -'பரமக்குடியில் 36 வார்டுகளிலும் மின்மோட்டாருடன் குடிநீர் தொட்டிகள் அமைத்து 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கப்படும்,' என நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சேது கருணாநிதி உறுதி அளித்தார்.

பரமக்குடி பெரியகடை பஜார் உட்பட பல இடங்களில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: நகர் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்படும். சலவைத் தொழிலாளர்களுக்கு வைகை ஆற்றின் கரையோரத்தில் நவீன சலவைக்கூடம் அமைப்பேன். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான காவிரி கூட்டு குடிநீர், சுகாதாரமான முறையில் வினியோகம் செய்வேன். சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் நவீன தரத்துடன் மேம்படுத்தப்படும். நெசவாளர்கள் தேவையை பூர்த்தி செய்வேன். வார்டுகளில் சோடியம் விளக்குகள் ஒளிரச் செய்வேன்து இருளற்ற நகராக மாற்றுவேன். நகரில் செப்பனிடாமல் உள்ள மண்சாலைகள் அனைத்தும் தார் மற்றும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும், என்றார். முன்னதாக ஆதரவாளர்களுடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். உடன் முத்தரசன், இளைஞரணி கீதம் ரமேஷ், வின்சென்ட் ராஜா, தேர்தல் பணிக்குழு ராஜரெத்தினம், கருப்பையா எம்.சி., முருகன், சங்கர், நாகராஜன், பாலமுருகன், வக்கீல் கருணாநிதி, மும்மூர்த்தி உட்பட திமுக., நிர்வாகிகள் உடன் சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us