Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மூணாறு கொலையில் தொடர் மர்மம் : திக்குமுக்காடுகிறது தனிப்படை

மூணாறு கொலையில் தொடர் மர்மம் : திக்குமுக்காடுகிறது தனிப்படை

மூணாறு கொலையில் தொடர் மர்மம் : திக்குமுக்காடுகிறது தனிப்படை

மூணாறு கொலையில் தொடர் மர்மம் : திக்குமுக்காடுகிறது தனிப்படை

ADDED : அக் 12, 2011 12:01 AM


Google News
Latest Tamil News

மூணாறு : மூணாறு லாட்ஜில், சென்னையைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், முதல் சுற்று தேடலில், கேரள போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னையில், அவர்கள் தேடிச் சென்ற முகவரிகளில், கொலை செய்யப்பட்டவர் குறித்த விவரமோ, கொலை செய்த மகேஷ்குமாரோ இல்லை. எனவே, ஈரோடு, கோவை என பல மாவட்டங்களில், விசாரணையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து, கேரளாவில் உள்ள மூணாறுக்கு சுற்றுலா வந்த மகேஷ்குமார், அவரது மனைவி என்று கூறப்படும் சியாமளா, தனியார் லாட்ஜில் தங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை, சியாமளாவை கொலை செய்த மகேஷ்குமார், தப்பினார். சியாமளாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வக்கப்பட்டுள்ளது.



தனிப்படை: கொலை குறித்து விசாரிக்க, கேரள போலீசார், தனிப்படை அமைத்தனர். சியாமளாவின் கைப்பையில் கண்டெடுக்கப்பட்ட, சென்னை, மேற்கு மாம்பலம் முகவரிக்குச் சென்றனர். அங்கிருந்து சியாமளா, காலி செய்து, இரண்டு மாதம் ஆகிவிட்டதாக, உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். எனவே, சியாமளாவின் குடும்பத்தினர் இருப்பிடம் தேடப்பட்டது. பின், சியாமளாவின் அம்மாவும், சகோதரி ஷாலினியாவும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது, சியாமளாவின் உடலை அடையாளம் காண்பதற்காக, கேரளா சென்றுள்ளனர். இடையில், மகேஷ்குமாரின் பெற்றோர், ஈரோடு மாவட்டம், பட்டிமணிக்காரன் பாளையத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று பார்த்தபோது, அங்கு மகேஷ்குமார் இல்லை. குடும்பத்தினரிடம் சண்டை போட்டு, ஏற்கனவே கோவை சென்று விட்டதாக, பெற்றோர் தெரிவித்து, முகவரியும் கொடுத்தனர். இதையடுத்து, போலீசார் கோவை விரைந்துள்ளனர். அதே போலீசார், மகேஷ்குமார், கோவையிலிருந்து சென்னை செல்ல வைத்திருந்த முன்பதிவு ரயில் டிக்கெட்டையும் கைப்பற்றினர். அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதால், சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.



முன்கூட்டியே வகுத்த திட்டம் : மூணாறு லாட்ஜில் முதலில் ஒதுக்கிய அறையை மாற்றி, மேல்மாடியில் இருந்து, ஜன்னல் வழியாக இறங்கிச் செல்ல வசதியான அறைக்கு, மகேஷ்குமார் மாறியுள்ளார். எனவே, அவர் கொலை திட்டத்தை, முன்னரே வகுத்திருக்க வேண்டும் என, போலீசார் கருதுகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us