லோக்பால் மசோதா: ராகுல் கோரிக்கையை ஏற்றது அரசு
லோக்பால் மசோதா: ராகுல் கோரிக்கையை ஏற்றது அரசு
லோக்பால் மசோதா: ராகுல் கோரிக்கையை ஏற்றது அரசு
ADDED : அக் 12, 2011 09:20 AM
புதுடில்லி: லோக்பால் அமைப்பு தன்னிச்சையான அமைப்பாக உருவாக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா கேட்டு சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த போராட்டத்தை கைவிட்டார். . அன்னா உண்ணாவிரத போராட்டத்தின் போது லோக்பால் மசோதா தொடர்பாக பார்லிமென்டில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல், லோக்பால் அமைப்பை, தேர்தல் ஆணையம் போல் தன்னிச்சையான அமைப்பாக உருவாக்க வேண்டும் என கூறினார். போராட்டத்தை கொண்டுவராததை கண்டித்து அரியானாமாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அன்னா குழுவினர் பிரசாரம் செய்து வருகின்றனர் இந்நிலையில் டில்லியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியல் சட்டதிருத்தத்துடன் லோக்பால் மசோதா கொண்டு வரப்படும். இதன் மூலம் லோக்பால் அமைப்புக்கு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் வழங்கப்படும் என கூறினார். மேலும் அவர், லோக்பால் அமைப்பு தேர்தல் ஆணையத்தை காட்டிலும் அதிகாரம் மிக்க அமைப்பாக விளங்கும்.லோக்பால் அமைப்புக்கு அரசியல் அதிகாரம் வழங்க தனி சட்டமசோதா கொண்டு வரப்படும் எனவும் கூறினார். லோக்பால் மசோதாவை கொண்டு வர ராகுல் தீவிரம் காட்டினார். லோக்பால் ம்சோதா மிகவும் முக்கியம் எனவும் ராகுல் கருதினார் எனவும் ராகுல் கூறினார்.


