Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/"நுழைக்க'பட்ட வாக்காளர்கள் திருகுவலியில் திருவாடானை

"நுழைக்க'பட்ட வாக்காளர்கள் திருகுவலியில் திருவாடானை

"நுழைக்க'பட்ட வாக்காளர்கள் திருகுவலியில் திருவாடானை

"நுழைக்க'பட்ட வாக்காளர்கள் திருகுவலியில் திருவாடானை

ADDED : அக் 13, 2011 09:06 PM


Google News

திருவாடானை : கல்லூர் ஊராட்சியை சேர்ந்த 35 வாக்காளர்கள், திருவாடானை ஊராட்சியில் சேர்க்கபட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

திருவாடானை ஒன்றியத்தை சேர்ந்தது கல்லூர் ஊராட்சி. இங்குள்ள 35 வாக்காளர்களின் பெயர்கள் திருவாடானை ஊராட்சி வாக்காளர் பட்டியலில் இடம் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கல்லூர் மகாலிங்கம் கூறியதாவது: 35 வாக்காளர்கள் மாற்றபட்டது குறித்து கடந்த ஆக.,29ல் தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டு சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றார். தாசில்தார் தர்மராஜன் கூறியதாவது: என்னிடம் மனு கொடுத்த அன்றே ஆர்.டி.ஓ., பார்வைக்கு அனுப்பிவிட்டேன். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் எதுவும் செய்யமுடியாத சூழல் உள்ளது. இருந்தபோதும் இது குறித்து ஆர்.டி.ஓ.,விடம் தகவல் தெரிவிக்கபடும், என்றார்.ஊராட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் கல்லூர் பகுதி வேட்பாளர்களும், திருவாடானையில் சேர்க்கபட்டதால் இந்த பகுதி வாக்காளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us