எதிர்பார்ப்பு கூடாது: சந்தோஷ் ஹெக்டே கருத்து
எதிர்பார்ப்பு கூடாது: சந்தோஷ் ஹெக்டே கருத்து
எதிர்பார்ப்பு கூடாது: சந்தோஷ் ஹெக்டே கருத்து
ADDED : ஆக 28, 2011 03:55 PM
பெங்களூரு: லோக்பால் மசோதா தொடர்பாக அதிசயம் ஏதும் நடந்து விடும் என பொது மக்கள் எதிர்பார்க்கக்கூடாது என கர்நாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.
போராட்டம் வாபஸ் பெற்றது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அன்னா குழுவில் இடம் பெற்றிருந்தவரும், கர்நாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது, லோக்பால் மசோதா தொடர்பாக முக்கிய 3 விஷயங்களை ஏற்றுக்கொண்ட பார்லிமென்ட்டை வணங்குவதாகவும், சட்டத்தை நிறைவேற்ற தேவையான காலம் எடுத்துக்கொள்ளப்படும். லோக்பால் மசோதாவில் அதிசயம் ஏதும் நடக்கும் என பொது மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். லோக்பால் விவகாரத்தில் பார்லிமென்டிற்கு நிறைய அழுத்தம் கொடுத்திருக்கக்கூடாது. லோக்பால்மசோதாவை விரைவில் நிறைவேற்றுவதன் அவசியத்தை பார்லிமென்ட் புரிந்து கொள்ள வேண்டும். இதனை செயல்படுத்துவதன் மூலம் பார்லிமென்டிற்கு பெருமை கிடைக்கும் என கூறினார். மேலும் அவர், வலுவான லோக்பால் மசோதாவை அடைவதற்கு முதல் மைல் கல்லை மட்டுமே கடந்துள்ளோம். மசோதா நிறைவேற இன்னும் காலமாகும். நீங்கள் எதிர்பார்ப்பது போல் இன்றோ, நாளையோ அல்லது அடுத்த மாதமோ நிறைவேறாது. லோக்பால் மசோதாவுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


