/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விவசாயத்திற்கான டிராக்டர்கள் மணல் அள்ளியதால் பறிமுதல்விவசாயத்திற்கான டிராக்டர்கள் மணல் அள்ளியதால் பறிமுதல்
விவசாயத்திற்கான டிராக்டர்கள் மணல் அள்ளியதால் பறிமுதல்
விவசாயத்திற்கான டிராக்டர்கள் மணல் அள்ளியதால் பறிமுதல்
விவசாயத்திற்கான டிராக்டர்கள் மணல் அள்ளியதால் பறிமுதல்
ADDED : ஜூலை 23, 2011 10:12 PM
தேவகோட்டை : விவசாயத்திற்கான சிறப்பு சலுகையாக குறைந்த வரியை செலுத்தி விட்டு மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
காரைக்குடி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் ராஜபாண்டியன், மாணிக்கம் ஆகியோர் தேவகோட்டை ஒத்தக்கடை அருகே ஆய்வு செய்தனர். ஆய்வில் பெரும்பாலான டிராக்டர்கள் விவசாய அனுமதியுடனும், ஓட்டுநர் லைசென்ஸ் இல்லாமலும், டிரெய்லர்கள் பதிவு எண் வாங்காததும் , சிகப்பு வெள்ளை ரிப்ளெக்டர் பொருத்தாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்து தேவகோட்டை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விவசாய அனுமதி பெற்றுக்கொண்டு ஏமாற்றி சரக்கு வாகனமாக பயன்படுத்தியது, டிரய்லருக்கு பதிவு எண் வாங்காதது உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


