ஏரி கால்வாய்களை சீரமைக்க 31 கோடிரூபாய் : ஜெ., உத்தரவு
ஏரி கால்வாய்களை சீரமைக்க 31 கோடிரூபாய் : ஜெ., உத்தரவு
ஏரி கால்வாய்களை சீரமைக்க 31 கோடிரூபாய் : ஜெ., உத்தரவு
ADDED : ஜூலை 23, 2011 05:06 PM
சென்னை : சிவகங்கை, விருதுநகர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரி கால்வாய்களை சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
31 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினால் சிவகங்கையில் மானாமதுரையும், விருதுநகரில் திருச்சுழியும், ராமநாதபுரத்தில் கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள 18 முறைசார்ந்த ஏரிகளின் கீழ் பாசனம்பெறும் 4755.22 ஏக்டேர் நிலங்களும், 71 முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள 6128.72 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


