/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சியில் போலி வாக்காளர்கள் அதிகம்? அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் முற்றுகைசெஞ்சியில் போலி வாக்காளர்கள் அதிகம்? அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் முற்றுகை
செஞ்சியில் போலி வாக்காளர்கள் அதிகம்? அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் முற்றுகை
செஞ்சியில் போலி வாக்காளர்கள் அதிகம்? அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் முற்றுகை
செஞ்சியில் போலி வாக்காளர்கள் அதிகம்? அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் முற்றுகை
ADDED : அக் 12, 2011 02:26 AM
செஞ்சி : செஞ்சி பேரூராட்சி வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க.,- தே.மு.
தி.க.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செஞ்சி பேரூராட்சி பகுதியில் பூத் சிலிப் வினியோகிக்கும் பணி நேற்று நடந்தது. இதில் வாக்காளர்கள் பலரின் பெயர் வேறு வார்டுகளில் மாறி இருந்தது. ஒருவருக்கே இரண்டு மூன்று இடங்களில் ஓட்டுக்கள் இருந்ததும் தெரிய வந்தது.சில வார்டுகளில் குடியில்லாத புதிய நபர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தது. பூத் சிலிப் விநியோகம் செய்த பேரூராட்சி ஊழியர்கள் தி.மு.க., வுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக கூறி நேற்று மாலை 4.30 மணிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் சுரேஷ்பாபு, தே.மு. தி.க., வேட்பாளர் பழனி ஆகியோருடன் இரு கட்சியினரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசனை முற்றுகையிட்டனர்.இவர்கள் போலி வாக்காளர்களை நீக்கம் செய்ய வேண்டும். பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை ஓட்டு போட அனுமதிக்க கூடாது. வார்டு மாற்றப்பட்டவர்களை பழைய வாக்காளர் பட்டியலில் உள்ளபடி அதே வார்டில் மீண்டும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கூறிய சமாதானங்களை ஏற்க மறுத்து விட்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து டி.எஸ்.பி., பன்னீர் செல்வம், தாசில்தார் தலைமலை பேரூராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். இப் பிரச்னை குறித்து எழுத்து பூர்வமாக புகார் தெரிவிக்கும் படியும், புகார் மீது கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து இரு கட்சியினரும் கலைந்து சென்றனர்.


