/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சிகளில் மனுத் தாக்கல் விபரம்உள்ளாட்சிகளில் மனுத் தாக்கல் விபரம்
உள்ளாட்சிகளில் மனுத் தாக்கல் விபரம்
உள்ளாட்சிகளில் மனுத் தாக்கல் விபரம்
உள்ளாட்சிகளில் மனுத் தாக்கல் விபரம்
ADDED : செப் 24, 2011 09:48 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில், நேற்று மனு தாக்கல் விபரம்: திண்டுக்கல் நகராட்சி 7 வது வார்டில் ஒரு சுயேச்சை வேட்பாளரும்; கொடைக்கானல் 8, 13 வது வார்டுக்கு தலா ஒரு சுயேச்சையும் மனுத்தாக்கல் செய்தனர்.
தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை.
* மாவட்ட ஊராட்சி 16 வது வார்டுக்கு சுயேச்சை மனுத்தாக்கல் செய்தார்.
* வேடசந்தூர் பேரூராட்சி: 14, 15 வது வார்டுகளில் தலா ஒரு சுயேச்சை மனு தாக்கல் செய்தனர்.
* ஊராட்சிகளில் 14 பேர், வார்டு உறுப்பினருக்கு மனுத்தாக்கல் செய்தனர்.
* நிலக்கோட்டை ஒன்றியம்:சிலுக்குவார்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக ஒருவரும், சிலுக்குவார்பட்டி ஊராட்சி தலைவருக்கு 3 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 39 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
* வத்தலக்குண்டு ஒன்றியத்தில், ஊராட்சி வார்டுகளில் 43 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
* வத்தலக்குண்டு பேரூராட்சி 10, 18 வது வார்டில் தலா ஒரு சுயேச்சை மனுத்தாக்கல் செய்தனர்.
* அய்யம்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நீதிராஜன் (சுயே.,) மனு தாக்கல் செய்தார்.
ஒட்டன்சத்திரம்: நகராட்சி தலைவர், கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு, நேற்று மனுத்தாக்கல் செய்யவில்லை. தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று ஒருவர் மட்டும் மனுத்தாக்கல் செய்தார். ஊராட்சி உறுப்பினருக்கு 11 பேர் மனு செய்தனர். ஊராட்சி உறுப்பினருக்கு இதுவரை, 38 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


