/உள்ளூர் செய்திகள்/மதுரை/அரசு நலத்திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள் :அமைச்சர் செல்லூர் ராஜூஅரசு நலத்திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள் :அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசு நலத்திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள் :அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசு நலத்திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள் :அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசு நலத்திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள் :அமைச்சர் செல்லூர் ராஜூ
ADDED : அக் 13, 2011 01:06 AM
மதுரை : 'மதுரை மாநகராட்சியில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டங்கள்
கிடைக்க அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பா மற்றும்
கவுன்சிலர்களுக்கு ஆதரவு தாருங்கள்,'' என, அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டு
கொண்டார்.
அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மதுரையில் பல பகுதிகளில்
பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: சட்டசபை
தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு தந்தீர்கள்.
ஐந்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை முதல்வர் ஜெயலலிதா, ஐந்து
மாதங்களில் செய்துள்ளார். தமிழகத்தில் 1.83 கோடி குடும்பங்களுக்கு இருபது
கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு லேப் டாப்
வழங்கப்படுகிறது. தமிழகத்தை கல்வியில் முதல் மாநிலமாக்க முயற்சிக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க.,வுக்கு
ஆதரவு தர வேண்டும், என்றார். முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., இளைஞரணி
முன்னாள் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி,
கவுன்சிலர் வேட்பாளர்கள் சாலைமுத்து, பூமிபாலகன், முருகேசன், கண்ணன்,
சின்னமுருகன், முனியம்மாள், வக்கீல் ரமேஷ் பங்கேற்றனர்.


