/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பூட்டியே கிடக்கும் அறையால் பறிபோகும் வெற்றி : ஹாக்கி விளையாட்டரங்கில் ஓய்விடமானது மரத்தடிபூட்டியே கிடக்கும் அறையால் பறிபோகும் வெற்றி : ஹாக்கி விளையாட்டரங்கில் ஓய்விடமானது மரத்தடி
பூட்டியே கிடக்கும் அறையால் பறிபோகும் வெற்றி : ஹாக்கி விளையாட்டரங்கில் ஓய்விடமானது மரத்தடி
பூட்டியே கிடக்கும் அறையால் பறிபோகும் வெற்றி : ஹாக்கி விளையாட்டரங்கில் ஓய்விடமானது மரத்தடி
பூட்டியே கிடக்கும் அறையால் பறிபோகும் வெற்றி : ஹாக்கி விளையாட்டரங்கில் ஓய்விடமானது மரத்தடி
ADDED : அக் 13, 2011 09:17 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஹாக்கி மைதானத்தில் குடிநீர் அறை பூட்டப்பட்டு கிடப்பதால், வீரர்கள் தாகத்தில் தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் சேதுபதிவிளையாட்டு அரங்கத்தையொட்டி, ஹாக்கி மைதானம் உள்ளது. இங்கு மாவட்ட, மாநில அளவிலான பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்கின்றன. வீரர்கள் வசதிக்காக உடை மாற்றம், ஓய்வு அறை உள்ளது. இந்த அறை திறக்கபடாததால், வீரர்களும், உடன் வரும் பயிற்சியாளர்களும் மரத்தடி நிழலில் இளைப்பாறும் அவலம் தொடர்கிறது. இதனால் காலையில் வெற்றியை ருசிக்கும் வீரர்கள், சரியான ஓய்வு எடுக்க முடியாமல் மாலையில் நடக்கும் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழக்கின்றனர். தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுத்து, நவீனமயமாக கட்டிக்கொடுக்கப்பட்ட ஹாக்கி மைதானத்தில் தண்ணீர் வசதியில்லாததால், மாணவர்கள் தாகத்தில் தவித்து வருகின்றனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் கிழவன் சேதுபதி கூறியதாவது: சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதில் ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு வசதிகளை செய்து தருகின்றனர். ஆனால் இங்கு வேலை பார்க்கும் பயிற்சியாளர், அந்த அறையை பூட்டி விட்டு சென்று விடுகிறார். மேலும் போட்டிகள் நடக்கும்போது இருப்பதில்லை. இதனால் திறமையானவர்களை கண்டறிந்து மாநில போட்டிகளுக்கு அனுப்ப முடிவதில்லை. மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் முறையிட்டும், எந்த பயனும் இல்லை, என்றார்.


