ADDED : செப் 16, 2011 12:22 AM
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பை அடுத்த வானமாதேவி மணவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீருடை வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார். ஆரோக்கியதாஸ்
வரவேற்றார். நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் கிரிஸ்டோபர் வாழ்த்திப் பேசினார். விழாவில் பள்ளி மாணவ,
மாணவியர்களுக்கு புதுவை நவசக்தி டவுன்ஷிப் நிர்வாக இயக்குனர் மணிரத்தினம்
இலவச சீருடை வழங்கினார். சத்யா ரவி நன்றி கூறினார்.


