/உள்ளூர் செய்திகள்/கரூர்/டி.என்.பி.எல்., பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழாடி.என்.பி.எல்., பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா
டி.என்.பி.எல்., பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா
டி.என்.பி.எல்., பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா
டி.என்.பி.எல்., பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா
ADDED : ஜூலை 24, 2011 01:12 AM
வேலாயுதம்பாளையம்: டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.
தமிழ்துறை தலைவர் ஹேமலதா வரவேற்றார். பள்ளி முதல்வர் வள்ளியம்மை குத்துவிளக்கேற்றி, சிந்தித்து வெற்றிபெறுவது குறித்து பேசினார். மாணவர் இலக்கிய மன்ற தலைவர், செயலாளர், பொறுப்பாளர் ஆகியோர் முத்திரை அணிந்து உறுதிமொழி ஏற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் செல்வம், பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் ஆகியோர் சூர்யபிரகாஷ் பங்கேற்று, 'பெண்ணின் மாண்பு' குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
* ஆங்கில இலக்கியமன்ற துவக்க விழாவில் ஆங்கிலத்துறையின் தலைவர் பொற்கொடி வரவேற்றார். இலக்கிய மன்ற மாணவி வெர்ஜின்சிந்யா, இலக்கியகற்றலின் அவசியம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் விஜயராசன் பங்கேற்றார். மாணவர் சதீஷ்குமார் நன்றி கூறினார். ஆங்கில இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் சௌக்கத்தாரா ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில், ஆங்கிலத்துறை ஆசிரியர்கள் பங்கேற்று வழிகாட்டு நிகழ்ச்சியையும், மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடந்தது.


