Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பி.எட்., தகுதி பதிவு செய்ய விடுமுறையில் சிறப்பு பணி

பி.எட்., தகுதி பதிவு செய்ய விடுமுறையில் சிறப்பு பணி

பி.எட்., தகுதி பதிவு செய்ய விடுமுறையில் சிறப்பு பணி

பி.எட்., தகுதி பதிவு செய்ய விடுமுறையில் சிறப்பு பணி

ADDED : செப் 04, 2011 09:42 PM


Google News
திண்டுக்கல்:ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தபோதும், பி.எட்., பதிவிற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பணி நடந்தது.

தமிழகம் முழுவதும் பி.எட்., தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 13 ல் வெளியிடப்பட்டது. இருந்தபோதும் நேற்று முன்தினம் தான் அந்தந்த கல்லூரிகளில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன.இதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும், ஆன்லைன் மூலமும் பதியலாம் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 454 பேர் தங்கள் பி.எட்., தகுதியை பதிவு செய்தனர். இரண்டாம் நாளான நேற்று 363 பேர் பதிவு செய்தனர்.இது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமும், பலர் தங்கள் பி.எட்., தகுதியை பதிவு செய்தனர். விடுபட்டவர்களுக்கு பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடக்கிறது. விடுமுறைநாளான நேற்று பி.எட்., பதிவுக்கென சிறப்பு பணிக்காக திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கியது. இதற்காக அனைத்து பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us