Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/எஸ்.ஐ., மாற்றத்துக்கு எதிர்ப்பு கிராமத்தினர் கையெழுத்து இயக்கம்

எஸ்.ஐ., மாற்றத்துக்கு எதிர்ப்பு கிராமத்தினர் கையெழுத்து இயக்கம்

எஸ்.ஐ., மாற்றத்துக்கு எதிர்ப்பு கிராமத்தினர் கையெழுத்து இயக்கம்

எஸ்.ஐ., மாற்றத்துக்கு எதிர்ப்பு கிராமத்தினர் கையெழுத்து இயக்கம்

ADDED : ஜூலை 23, 2011 10:26 PM


Google News

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் பணிபுரிந்த எஸ்.ஐ.,இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வத்திராயிருப்பு அருகே வ. புதுப்பட்டியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருபிரிவினரிடையே தொடர்ந்து ஜாதி மோதல் இருந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வருடமாக வ.புதுப்பட்டியில் போலீசார் முகாமிட்டுள்ளனர். ஆனாலும்அவ்வப்போது திடீரென கலவரம் வெடிக்கிறது. இதை கட்டுப்படுத்த எஸ்.பி., சிறப்பு அனுமதியின் பேரில் வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ.,யாக சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டார். அவருடன் 10 ரிசர்வ் போலீசார் அடங்கிய சிறப்பு குழுவும் நியமிக்கப்பட்டது. அவர்களது அதிரடி நடவடிக்கையால் கலவரக்காரர்கள், சமூக விரோதிகள் கட்டுப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் எஸ்.ஐ., திடீரென திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு பகுதி மக்களும் தாங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மீண்டும் அவரை வத்திராயிருப்பில் நியமிக்க வலியுறுத்தி வ.புதுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் முதல்வர், டி.ஜி.பி., உட்பட பலருக்கு தந்தி, பேக்ஸ், ஈமெயில் கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். வத்திராயிருப்பில் ஆங்காங்கே தட்டி போர்டுகள் வைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பல்வேறு கிராமங்களிலும் பொதுமக்களே முன்வந்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். வரும் 28ம் தேதி அனைத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us