
புரட்டாசி டெக்னிக்...!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் கடைசி கூட்டம், ஆகஸ்ட் மாதம் நடந்தது.
'முதலில் யாரை சுடுவது?'
சென்னை தி.நகரில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. நெல்லை பாலு, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். வெகு நேரமாகியும் விருதுகள் வழங்கப்பட வில்லை. மாணவர்களும் தலையில் கையை வைத்து, 'எப்போது முடிப்பார்' என யோசித்து கொண்டிருந்தனர். பேசி முடிக்கும் முன், 'இறுதியாக' என்றவர், 'மேடையில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் துப்பாக்கியை எடுத்து, அவரை குறி பார்த்து அவர் அருகில் சென்றான். அவரோ பயந்து நடுங்கினார். பேச்சாளர் காதோரமாக சென்று, 'உன்னை சுட மாட்டேன்; இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவனை தான் சுடப்போகிறேன். நீ பேசு...' என்றானாம்... அது போல...' எனக் கூறி முடித்தவுடன், அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. குறும்புக்கார மாணவர் ஒருவர் சிரித்து கொண்டே, 'முதலில் உன்ன சுடணும்' என, 'கமென்ட்' அடிக்க, மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மத்தியிலும் சிரிப்பலை கிளம்பியது.


