Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முண்டியம்பாக்கம் ஆலையில்சார்பு செயலாளர்கள் ஆய்வு

முண்டியம்பாக்கம் ஆலையில்சார்பு செயலாளர்கள் ஆய்வு

முண்டியம்பாக்கம் ஆலையில்சார்பு செயலாளர்கள் ஆய்வு

முண்டியம்பாக்கம் ஆலையில்சார்பு செயலாளர்கள் ஆய்வு

ADDED : செப் 16, 2011 12:35 AM


Google News
விழுப்புரம்:முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சக்கரை ஆலையில் மத்திய அரசின் பொது மற்றும் பயிற்சி துறை யின் சார்பு செயலாளர்கள் ஆய்வு செய்தனர்.

மத்திய அரசின் சார்பு செயலாளர்கள் சாத்திரமணி, விகாஸ், ஸ்ரீவத்ஸா, ஆஷீஸ்மோகன், பர்வீன்சர்மா, மதன்சரஷியா, பங்கஜ்குமார், ராஜேஷ்லகேரா, விஜயகுமார் உபதாய், நரேந்திரசிங், நீரஜ்சவ்தேவா, தேப்ரஞ்சன் சட்டோபாத்யா மற்றும் அஜய்குமார் சிங் ஆகிய 12 பேரும் விழுப்புரம் மாவட்டத்தில் களப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவினர் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். கரும்பு எடைபோடும் இடம், அரவை இயந்திரங்கள், சர்க்கரை உற்பத்தி செய்யுமிடம் ஆகியவற்றை பர்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையின் துணை பொது மேலாளர் கதிரவன், உதவி மேலாளர்கள் ஜோத்குமார் மற்றும் சிவசண்முகம் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us