Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போலீஸ் விசாரணை மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு

போலீஸ் விசாரணை மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு

போலீஸ் விசாரணை மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு

போலீஸ் விசாரணை மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு

ADDED : ஆக 19, 2011 02:37 AM


Google News
திருச்செங்கோடு: திருச்செங்கோடு மின்வாரிய அலுவலகத்தில் கைவரிசை காட்டி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் மின்வாரிய ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அப்போது, அலுவலகத்தினுள் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது. அங்கிருந்த இரும்புப் பெட்டி உடைக்கப்பட்டு, உள்ளிருந்த, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், வங்கிக் காசோலை உட்பட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகியிருந்தன. அதுகுறித்து, அலுவலக பொறியாளர், திருச்செங்கோடு ரூரல் போலீஸில் புகார் செய்தார். சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மின்வாரிய அலுவலகத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us