/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புறநகர் ரயில்களில் தரமற்ற தின்பண்டங்கள் : உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் பயணிகள்புறநகர் ரயில்களில் தரமற்ற தின்பண்டங்கள் : உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் பயணிகள்
புறநகர் ரயில்களில் தரமற்ற தின்பண்டங்கள் : உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் பயணிகள்
புறநகர் ரயில்களில் தரமற்ற தின்பண்டங்கள் : உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் பயணிகள்
புறநகர் ரயில்களில் தரமற்ற தின்பண்டங்கள் : உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் பயணிகள்
பொன்னேரி : புறநகர் ரயிகளில் விற்கப்படும் வாட்டர் பாக்கெட்கள் மற்றும் தின்பண்டங்கள் தரமற்றதாக இருப்பதால், அதை வாங்கிச் சாப்பிடும் பயணிகள், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
பயணிகளும் தாகம் தணிக்க வேறுவழியின்றி, இந்த தரமற்ற வாட்டர் பாக்கெட்களை வாங்கி குடிக்கின்றனர். புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தின்பண்டங்கள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை, ரயில்வே கோட்ட மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வியாபாரிகள் இவர்களை முறையாக கவனிப்பதால், அதிகாரிகளும் எவ்வித சோதனைகளும் மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், பாதிக்கப்படுவது அப்பாவி பயணிகளே. பயணிகளின் உடல் நலன் கருதி, மருத்துவ அதிகாரிகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சோதனை செய்து, ஆரோக்கியமான உணவுகளை பயணிகளுக்கு வழங்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறிய போது,'புறநகர் ரயில்களில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு, விற்பனை செய்பவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.


