ADDED : ஜூலை 25, 2011 10:47 PM
ஒட்டன்சத்திரம் : மானாவாரி நிலங்களில் ஆடிப்பட்ட உழவுக்காக, மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம், சுற்று கிராமப்பகுதிகளில் அதிகளவில் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழை பெய்தால் தான் விவசாயம் களை கட்டும். ஆடி மாத மழையை நம்பி மானாவாரி நிலங்களில், உழவு செய்து விதைப்பதற்கான பணிகளை தொடங்குவர். ஆடி மாதம் தொடங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இப்பகுதியில் மழை பெய்யவில்லை. மழை நன்றாக பெய்தால் கடலை, மக்காச்சோளம் அதிகளவில் பயிர் செய்யப்படும். இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


