ராஜபாளையம் : தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் சார்பில் ராஜபாளையத்தில் மாவட்ட மாநாடு மற்றும் பொன்விழா கருத்தரங்கு நடந்தது.
பொருளாளர் சாந்திலால் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி ராமசாமி துவக்கி வைத்தார். லிங்கம் எம்.பி., பேராசிரியர் கமலா வரவேற்றனர். பேராசிரியர் முத்துமோகன், வக்கீல் பால்ராஜ், ஆசிரியர் தங்கராஜ் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக ஸ்ரீபதி, துணைதலைவர்களாக மணியன், பாலசந்திரன், செயலாளராக கண்மணி ராசா, துணைசெயலாளர்களாக அபூர்வன் ராசா, சுவாமிநாதன், பொருளாளராக டாக்டர் சாந்திலால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கவிஞர் முருகேசன் நன்றி கூறினார்.


