/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்அரியலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
அரியலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
அரியலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
அரியலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
ADDED : அக் 07, 2011 02:10 AM
அரியலூர்: அரியலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை நேற்று துவங்கியது.
தமிழக நெசவாளர்களின் வாழ்வை தரத்தை மேம்படுத்த, 1935ம் ஆண்டு துவக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளின், தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கவிழா அரியலூரில் நேற்று நடந்தது. அரியலூர் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடந்த சிறப்பு விற்பனை துவக்க விழாவுக்கு, கோ-ஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல மேலாளர் தண்டாயுதபாணி தலைமை வகித்தார். கிளை மேலாளர் கண்ணன் வரவேற்றார். தீபாவளி சிறப்பு விற்பனையை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்த, அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ், அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும், 53 லட்ச ரூபாய் தீபாவளி விற்பனைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பேசினார். விழாவில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சங்கர வடிவேல், தாசில்தார் முத்து வடிவேல், வணிகர் சங்க நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் கோமதி முத்து நன்றி கூறினார்.


