Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தச்சு தொழிலாளர்களுக்கு நல வாரியம் விஸ்வகர்மா பேரவையினர் கோரிக்கை

தச்சு தொழிலாளர்களுக்கு நல வாரியம் விஸ்வகர்மா பேரவையினர் கோரிக்கை

தச்சு தொழிலாளர்களுக்கு நல வாரியம் விஸ்வகர்மா பேரவையினர் கோரிக்கை

தச்சு தொழிலாளர்களுக்கு நல வாரியம் விஸ்வகர்மா பேரவையினர் கோரிக்கை

ADDED : செப் 04, 2011 11:29 PM


Google News

விழுப்புரம் : அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் தச்சர்கள் கருத்தரங்கம் விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரம் விஸ்வகர்மா சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் குருமூர்த்தி வரவேற்றார். மாநில செயலாளர் ரமேஷ் துவக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் மாணிக்கவேலு தச்சர்களின் கோரிக்கைகள் பற்றி பேசினார். தேசிய தலைவர் ரங்கநாதன், பொருளாளர் சிவகுமார், பொற்கொல்லர் நலவாரிய உறுப்பினர் செல்வம் சிறப்புரையாற்றினர். புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சுகுமார், விஸ்வகர்ம பொன், வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்க தலைவர் அப்பாவு, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் சுந்தரம் வாழ்த்துரை வழங்கினர். தச்சு தொழிலாளர்களுக்கு அரசு தனி நலவாரியம் அமைத்து தர வேண்டும். தமிழக அளவில் அமையவுள்ள மாவட்ட தொழிற்பேட்டையில் தச்சர்களுக்கு தொழில் செய்யும் தொழிற்கூடம் ஒதுக்கி தருதல், தச்சர்களுக்கு தேவையான மரம் பிளைவுட் போன்ற பொருட்கள் விற்பனைக்காக கூட்டுறவு சங்கம் அமைத்தல், திருக்கோவில் வாகனங்கள் மற் றும் மரம் சம்பந்தமான அனைத்து பணிகளையும் தொடர்ந்து பராமரிக்க கோவில்கள் தோறும் மர தச்சர்களை நிரந்தர பராமரிப்பு பணியாளர்க ளாக நியமித்தல் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் மகாலிங் கம் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us