ADDED : செப் 07, 2011 01:57 AM
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே எஸ்ஆர்எம்எஸ் பள்ளியில் எழுத்தறிவு தினவிழா கொண்டாடப்பட்டது.கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஸ்ரீராமூர்த்தி சுவாமிகள் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் திருக்குமரன் முன்னிலை வகித்தனர். இதையடுத்து உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பள்ளிக்குழந்தைகள் எழுத்தறிவு சின்னம் வடிவில் நின்று எழுத்தறிவை வளர்க்க உறுதிமொழி எடுத்தனர். விழாவில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் பவானி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


