ADDED : ஜூலை 24, 2011 01:19 AM
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் காமராஜர் ஆதித்தனார் கைப்பந்துகழகம் சார்பில் வாலிபால் போட்டி நடந்தது.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கைப்பந்து போட்டிக்கு புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் தனபாலன் சத்திய சிகாமணி தலைமை வகித்தார்.
கைப்பந்து கழகச் செயலாளர் சூரசம்ஹாரன் வரவேற்றார். பள்ளித்தாளாளர் டாக்டர் ஆசீர்வாதம் மனோகரன் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.திசையன்விளை டி.வி.சி.அணி முதல்பரிசும், சாத்தான்குளம் யுனிவர்சல் அணி இரண்டாம் பரிசும் கலுங்குவிளை அணி மூன்றாம் பரிசும் தண்டர்பாய்ஸ் அணியினர் நான்காம் பரிசும் பெற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு வக்கீல் ரெக்ஸ் சந்தனரவி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராசையா பரிசு வழங்கினார்.


