/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிருஷ்ணா நகர் சைடு வாய்க்கால் பணி மழைக்காலத்திற்குள் முடிக்க எதிர்பார்ப்புகிருஷ்ணா நகர் சைடு வாய்க்கால் பணி மழைக்காலத்திற்குள் முடிக்க எதிர்பார்ப்பு
கிருஷ்ணா நகர் சைடு வாய்க்கால் பணி மழைக்காலத்திற்குள் முடிக்க எதிர்பார்ப்பு
கிருஷ்ணா நகர் சைடு வாய்க்கால் பணி மழைக்காலத்திற்குள் முடிக்க எதிர்பார்ப்பு
கிருஷ்ணா நகர் சைடு வாய்க்கால் பணி மழைக்காலத்திற்குள் முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 25, 2011 01:59 AM
புதுச்சேரி : கிருஷ்ணா நகரில் சைடு வாய்க்கால் அமைக்கும் பணியை மழை துவங்குவதற்கு முன் முடிக்க வேண்டும்.
மழைக் காலங்களில் கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுப்பதால், அங்கு குடியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சுனாமி நிதியிலிருந்து கிருஷ்ணா நகர் மெயின்ரோட்டில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சைடு வாய்க்கால் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கியது.
தற்போது மெயின் ரோட்டிலுள்ள 5வது தெருவிலிருந்து 20வது தெரு வரை சைடு வாய்க்கால் அமைப்பதற்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர், வாய்க்கால் வழியாக முதலாவது தெருவிலுள்ள பெரிய வாய்க்காலுக்கு திருப்பி விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன் பணிகளை முடித்தால் இப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்” விடுவர்.


