ADDED : அக் 08, 2011 11:24 PM
சாத்தூர் : சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றில், நேற்று காலை 11 மணிக்கு, சிவகாசி தாசில்தார் ராமச்சந்திரன், ஜெயராமன் ஆர்.ஐ., ஆகியோர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அன்னபூரணியாபுரத்தை சேர்ந்த மாரிஸ்வரன், செவல்பட்டியை சேர்ந்த ராமசாமி, டிராக்டரில் மணலை முறையான அனுமதியின்றி எடுத்தததை கண்டுபிடித்தனர். டிராக்டரை பறிமுதல் செய்து, சிவகாசி தாசில்தார் அலுவகத்திற்கு கொண்டு சென்றனர். மணலை திருடிய டிராக்டர் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க ஆர்.டி.ஒ.,க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


