Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு

மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு

மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு

மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு

ADDED : செப் 03, 2011 12:19 AM


Google News

ஓசூர்: ஓசூர் அருகே மூன்று டவுன் பஞ்சாயத்துகளுக்கு ஒரே ஒரு செயல் அலுவலர் பணியாற்றுவதால், மூன்று டவுன் பஞ்சாயத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் மட்டுமின்றி முக்கிய அடிப்படை பணிகள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

ஓசூர் அருகே மத்திகிரி, கெலமங்கலம் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய மூன்று டவுன் பஞ்சாயத்துகள் செயல்படுகிறது. மூன்று டவுன் பஞ்சாயத்துகளும் வளர்ந்து வரும் நகரங்களாக உள்ளதால், மக்கள் தொகை அதிகளவில் உள்ளது. இவற்றில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய டவுன் பஞ்சாயத்தில் கடந்த சில மாதமாக செயல் அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. இதனால், மத்திகிரி டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த செயல் அலுவலர் சந்திரசேகர் கூடுதல் பொறுப்பாக கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய டவுன் பஞ்சாயத்துகளை சேர்த்து கவனித்து வந்தார்.



இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மத்திகிரியோடு பர்கூர் டவுன் பஞ்சாயத்தை சேர்த்து கவனித்து வருகிறார். தற்போது மத்திகிரி, கெலமங்கலத்தில் பொறுப்பாகவும், தேன்கனிக்கோட்டையில் ரெகுலர் செயல் அலுவலராகவும் பணிபுரிந்து வந்தார். ஒரே செயல் அலுவலர் பல்வேறு டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களை சேர்த்து கவனிப்பதால் வளர்ச்சி பணிகள் விரைவாகவும், முழுமையாகவும் முடிக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அவசர கால அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.



செயல் அலுவலர் அலுவலகத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வந்து செல்வதால், அன்றாட பணிகளில் தேக்கநிலை நீடித்து வருகிறது. கவுன்சிலர்கள் அலுவலக ஊழியர்களை தங்கள் கைபாவைகளாக பயன்படுத்தி விதிமுறைகளை மீறி பல்வேறு பணிகளை செய்ய வலியுறுத்துகின்றனர். செயல் அலுவலர் அலுவலகத்துக்கு வருவது அபூர்வமாக உள்ளதால், பணிகளை முடித்த கான்டிராக்டர்களுக்கு உடனுக்குடன் 'செக்' வழங்க முடியவில்லை. இதனால், இவர்கள் டெண்டர் எடுத்த பணிகளை அடுத்து துவங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளநிலையில், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் மத்திகிரி டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், தேர்தலுக்காக மக்களை மீண்டும் சந்திக்க உள்ள கவுன்சிலர்கள், தங்களுடைய வார்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்த வளர்ச்சி பணிகளை முடிக்க முடியாமல் கலக்கம் அடைந்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us