Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சலுகைகளை காப்பாற்ற சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சலுகைகளை காப்பாற்ற சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சலுகைகளை காப்பாற்ற சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சலுகைகளை காப்பாற்ற சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 08, 2011 01:52 AM


Google News

கோவை : 'ஏற்கனவே, ஒப்புதல் வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்துவிடக்கூடாது' என, சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மேட்டுபாளையம் ரோடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டம், விளக்க பொதுக்கூட்டத்திற்கு, சங்கத்தின் உதவி தலைவர் அப்துல்ரசீத் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மலைப்படியாக அளிக்க வேண்டிய 10 சதவீத தொகை அளிப்பதில்லை. கிளைகளுக்கு போதுமான உதிரி பாகம் கிடைப்பதில்லை. தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின், கிடைக்க வேண்டிய பணப்பயன் தாமதமாகிறது. தொழிலாளர்கள் தங்கும் ஓய்வறைகள் மோசமாக உள்ளன. கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வைத்தால், பணம் இல்லை என்ற பதிலே வருகிறது'' என்றார். 8ம் தேதி (இன்ற) சட்டசபையில் போக்குவரத்து மானியக்கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த மானியக்கோரிக்கையில், வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் ஏற்கனவே உள்ள ஒப்புதல்களை அமல்படுத்த வேண்டும். அதாவது, புதிதாக நியமனம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, சட்டப்படி சம்பளம்; 240 நாள் பணி முடித்தவுடன் பணி நிரந்தரம்; ஓய்வளித்தல் மற்றும் விடுப்பு எடுத்தல் என, 20 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், பொது செயலாளர் காளியப்பன், இணை பொது செயலாளர்கள் காந்தி, சேதுராமன், அருணகிரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us