/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆறு திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்ஆறு திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்
ஆறு திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்
ஆறு திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்
ஆறு திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்
ADDED : செப் 06, 2011 01:57 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்
கூட்டத்தில், ஆறு திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம்
நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார் . இலவச வீட்டுமனைப்
பட்டா, முதியோர் உதவித் தொகை, குடிநீர் வசதி, கல்விக் கடன் உள்ளிட்டவை
கோரி, 562 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுக்களை பரிசீலனை செய்த மாவட்ட கலெக்டர், 15 தினங்களுக்குள் நடவடிக்கை
எடுக்கும்படி உத்தரவு பிறபித்தார். மாவட்ட வழங்கல் துறை மூலம் ஆறு
திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. மேலும், சமூக பாதுகாப்பு
திட்டத்தின் கீழ், 22 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு
வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் சீத்தாலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணைக் கலெக்டர் சண்முகராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


