ADDED : ஆக 30, 2011 02:34 AM
ரெட்டியார்சத்திரம்: பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது.
இதில், ஹெச்.சி.எல்., கம்யூட்டர் நிறுவனத்தினர் தேர்வு நடத்தினர். மனிதவளத் துறை தலைவர் பிரியஸ்ரீ தலைமை வகித்தார். 222 மாணவர்கள் கலந்து கொண்டதில் 145 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டு வருமானமாக 3.25 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


