/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆபரேட்டர்கள் நியமனம் இல்லாததால் பல லட்ச ரூபாய் கம்ப்யூட்டர்கள் வீண்ஆபரேட்டர்கள் நியமனம் இல்லாததால் பல லட்ச ரூபாய் கம்ப்யூட்டர்கள் வீண்
ஆபரேட்டர்கள் நியமனம் இல்லாததால் பல லட்ச ரூபாய் கம்ப்யூட்டர்கள் வீண்
ஆபரேட்டர்கள் நியமனம் இல்லாததால் பல லட்ச ரூபாய் கம்ப்யூட்டர்கள் வீண்
ஆபரேட்டர்கள் நியமனம் இல்லாததால் பல லட்ச ரூபாய் கம்ப்யூட்டர்கள் வீண்
ADDED : ஆக 26, 2011 11:30 PM
சிவகங்கை : ஊராட்சிகளில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் இல்லாததால் அரசு வழங்கிய கம்ப்யூட்டர்கள் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.ஊராட்சி அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து,பணிகளை எளிதாக்கும் வகையில் 12 ஆயிரத்து 618 ஊராட்சி அலுவலகங்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது.
ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செலவு செய்யப்பட்ட விபரம், பணி செய்தவர்களின் எண்ணிக்கை, வேலை உறுதி திட்ட பயனாளிகள் விபரம், கண்மாய், ரோடுகள் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டது. இதற்காக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக பஞ்சாயத்தின் வருமானத்திற்கு ஏற்ப மாதம் 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. குறைவான ஊதியம், கூடுதல் பணி இருந்தாலும் பணி நிரந்தர நம்பிக்கையில் இவர்கள் பணியாற்றினர். அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், அதற்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு இத்திட்டம் குறித்தும், பணியாளர்கள் குறித்தும் கண்டு கொள்ளவில்லை. பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படாததால், இப்பணியில் இருந்த ஆபரேட்டர்கள் பலர் வேறு வேலைக்கு சென்று விட்டனர்.கம்ப்யூட்டர்கள் வீண்: பெரும்பாலான ஊராட்சிகளில் ஆபரேட்டர்கள் இல்லாததால், கம்ப்யூட்டர்கள் பயன்பாடில்லாமல் கிடக்கின்றன. ஊராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''பணி நிரந்தரம், குறைந்த சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் பணியில் தற்போது யாரும் இல்லை. ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாததால் கணக்கு நோட்டுகளில் பதிவு செய்கிறோம். புகைப்படங்களை சேமிப்பதில்லை. இந்த நிலையில் பயன்படுத்தாத நிலையில் இருக்கும் கம்ப்யூட்டர்களுக்கு பிராட்பேண்ட் சேவை அளிக்க உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பயன்படுத்தாமல் உள்ள இந்த கம்ப்யூட்டர்களை இயக்க ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும். இல்லையேல் புதியதாக வி.ஏ.ஓ., ஆர்.ஐ.,க்களுக்கு கம்ப்யூட்டர் வழங்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த கம்ப்யூட்டரையாவது பயன்படுத்தலாம்,'' என்றார்.


