ADDED : செப் 02, 2011 11:59 PM
பழநி : சமீபத்திய மழையால் பழநி அணைகளில் நீர்மட்டம் உயந்துள்ளது.
சில நாட்களாக வரதமாநதி, குதிரையாறு அணைகளில் வெகுவாக நீர்மட்டம் குறைந்திருந்தது. பாலாறு பொருந்தலாறு அணை, முற்றிலும் வறண்ட நிலையில் இருந்தது. இரு வாரங்களாக, மேற்குத்தொடர்ச்சி மலையில் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நீர்மட்டம்: வரதமாநதி அணை 48.8 அடி (மொத்த உயரம் 67 அடி). பாலாறுபொருந்தலாறு 27.07 அடி (மொத்த உயரம் 65 அடி). குதிரையாறு 41.63 அடி (மொத்த உயரம் 80 அடி). இரண்டு நாட்களாக கனமழை இல்லாதபோதும், வரதமாநதி, குதிரையாறு அணைகளுக்கு கணிசமான நீர்வரத்து உள்ளது.


