/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தாட்கோ மூலம் இலவச கனரக ஓட்டுனர் பயிற்சிதாட்கோ மூலம் இலவச கனரக ஓட்டுனர் பயிற்சி
தாட்கோ மூலம் இலவச கனரக ஓட்டுனர் பயிற்சி
தாட்கோ மூலம் இலவச கனரக ஓட்டுனர் பயிற்சி
தாட்கோ மூலம் இலவச கனரக ஓட்டுனர் பயிற்சி
ADDED : செப் 04, 2011 02:22 AM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் இலவச கனரக ஓட்டுனர்
பயிற்சி அளிக்கப்படுகிறது.இலகுரக ஓட்டுனர் உரிமம், பி.எஸ்.வி., பேட்ஜ்
பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ
ஆதிதிராவிடர்களுக்கு இலவச கனரக ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படுகின்றன. 20
வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து
கொள்ளலாம்.ஒவ்வொருவருக்கும் 19,500 ரூபாய் செலவில் ஐ.ஆர்.டி., நிறுவனம்
மூலம் பயிற்சியளிக்கப்படும். தமிழகம் முழுவதும் 170 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு வாய்ப்பு உள்ளது.
இதற்கான பயிற்சி வரும் 19ம் தேதி துவங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேருவதற்கு கடந்த மாதம் 8ம் தேதி 20 வயதிற்கு மேற்பட்ட
வராகவும், உயரம் குறைந்த பட்சம் 159.5 செ.மீ., மற்றும் 50 கிலோ எடை
உள்ளவராக இருக்க வேண்டும். 8ம் வகுப்பில் தமிழை பாடமாக கொண்டு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். அதேபோல் கடந்த மாதம் 8ம் தேதி இலகுரக வாகன ஓட்டுனர்
உரிமம் பெற்று ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். கண்ணாடி அணியாமல்,
கண்பார்வை குறைபாடு இல்லாமல், உடல் ஊனமின்றி இருக்க
வேண்டும்.இப்பயிற்சியில் சேர விரும்புவோர் மாற்றுச் சான்று, ஓட்டுனர்
உரிமம், சாதி சான்று, வருமானச் சான்று, ரேஷன் கார்டு நகல்கள் மற்றும்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள
தாட்கோ அலுவலகத்தில் வரும் 13ம் தேதி நடக்கும் நேர்காணலில் கலந்து
கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மணிமேகலை செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


