/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/உள்ளிருப்பு போராட்டம் குடந்தை அரசு கவின் கலை கல்லூரியில் திடீர் பரபரப்புஉள்ளிருப்பு போராட்டம் குடந்தை அரசு கவின் கலை கல்லூரியில் திடீர் பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டம் குடந்தை அரசு கவின் கலை கல்லூரியில் திடீர் பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டம் குடந்தை அரசு கவின் கலை கல்லூரியில் திடீர் பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டம் குடந்தை அரசு கவின் கலை கல்லூரியில் திடீர் பரபரப்பு
ADDED : அக் 12, 2011 02:27 AM
கும்பகோணம்: பள்ளி ஓவிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு அரசு கவின்
கலைக்கல்லூரியில் பி.எப்.ஏ., பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களின்
கல்வியை கல்வித்தகுதியாக அரசு அறிவிக்கக்கோரி அரசு கவின் கலை கல்லூரி மாணவ,
மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று நடத்தினர்.
தமிழகத்தில்
கும்பகோணம் மற்றும் சென்னையில் மட்டுமே அரசு கவின் கலைக்கல்லூரி உள்ளது.
இதில் கும்பகோணத்தில் மட்டும் இளங்கலை, முதுகலை உள்பட மொத்தம் 300
மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் படித்து முடித்து பட்டம்
பெற்றவுடன் தொடக்க கல்வி முதல் மேனிலைக்கல்வி வரை உள்ள பள்ளிகளில் ஓவிய
ஆசிரியர்களாக இவர்களை நியமனம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை மற்றும்
சுற்றுலா மற்றும் கலைப்பண்பாட்டுத்துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும்
மூன்று மாதம் மட்டுமே படிக்கும் டி.டி.சி., படித்தால் ஓவிய ஆசிரியர்
பணியில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், பி.எப்.ஏ.,
படிப்பு படித்தவர்களுக்கு பணி கிடைக்காமல் போய்விடலாம் என்ற அச்சத்தில்
மாணவ, மாணவிகள் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு
போராட்டத்தை நேற்று காலை முதல் மாலை வரை வகுப்புகளை புறக்கணிப்பு செய்து
நடத்தினர். இதுகுறித்து முதுகலை படித்து வரும் மாணவர்கள் நிருபர்களிடம்
கூறியதாவது: நாங்கள் முதுகலை படிக்கும் மாணவர்கள். நான்கு வருடம்
கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்குகிறோம். எங்களுக்கு தொடக்கக்கல்வி முதல்
மேனிலைக்கல்வி வரை உள்ள பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்களாக பணிபுரிய ஏற்கனவே
பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின்
அரசாணையில் உள்ளது. ஆனால், தற்போது தமிழக அரசு எஸ்.எஸ்.எல்.சி., மற்றும்
மூன்று மாதமே பயிலும் டி.டி.சி., பயில்பவர்கள் ஓவிய ஆசிரியர்களாக
நியமிக்கபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 21 ஆண்டாக பள்ளி ஓவிய
ஆசிரியர் பணிக்கு எங்களை கல்வித்தகுதி உள்ளவர்களாக நியமிக்கப்பட அரசின்
ஆணை வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு
எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழக முதல்வர்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளோம். எனவே
எங்கள் கோரிக்கையை பரிசீலித்து முடிவு அறிவிக்கவில்லை எனில் நாங்கள்
உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கடுமையாக நடத்த
உள்ளோம். இங்கு நாங்கள் நடத்தும் போராட்டம் போல் சென்னை அரசு கவின்
கலைக்கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு மாணவர்கள்
தெரிவித்தனர்.


